** நாளாந்தம் நடக்கும் பல சம்பவங்கள், நம் வாழ்வில் சம்பவமாக சென்று விடுகிறது.. அதனை ரசிக்கத் தவறி விடுகிறோம்.. அதனால் பிறந்தது இந்த கவிதை **
ரசித்ததுண்டா.
அதிகாலை பனியில்,
அணைத்துக் கொள்ளும் காற்றில் நடந்து ரசித்ததுண்டா.
அதிகாலை சூரிய வெளிச்சத்தில்,
காக்கை குருவி சத்தம் ரசித்ததுண்டா.
கடும் மழையில் ஒரு குடையில்,
குடும்பமாக நடந்து ரசித்ததுண்டா.
களைத்து வரும் வேலையில்,
காற்றின் சுகந்தம் ரசித்ததுண்டா.
கடற்கரை ஓரத்தில் கால்கள் நனைத்து,
அலைச்சத்தம் ரசித்ததுண்டா.
கடலோரம் மணல் வீடு கட்டி,
சிப்பிகள் பதித்து ரசித்ததுண்டா.
வயலோரம் நடந்து
நாட்டு நாடும் அழகை ரசித்ததுண்டா.
வாசல் திண்ணையில்,
கோலம் போடும் அழகை ரசித்ததுண்டா.
கூட்டத்தின் நடுவே,
உனை தேடும் மனைவியை ரசித்ததுண்டா.
குறும்பு செய்துவிட்டு,
பிதுங்க முழிக்கும் குழந்தையை ரசித்ததுண்டா.
குழந்தைகளின் வாய்ச்சண்டையின்,
வசனங்களை ரசித்ததுண்டா.
தோல்வியுற்றதும் அவர்கள்,
அழும் அழுகையை ரசித்ததுண்டா.
இது போன்ற,
சுமாரான கவிதையை ரசித்ததுண்டா.
இன்றிலிருந்து தானும் கவிஞன் ஆகி,
பிறர் கஷ்டங்களை ரசிக்கப் போவதுண்டா...
ஹா ஹா ஹா....
ஆக்கம்
அபு அம்மாராஹ்
ரசித்ததுண்டா.
அதிகாலை பனியில்,
அணைத்துக் கொள்ளும் காற்றில் நடந்து ரசித்ததுண்டா.
அதிகாலை சூரிய வெளிச்சத்தில்,
காக்கை குருவி சத்தம் ரசித்ததுண்டா.
கடும் மழையில் ஒரு குடையில்,
குடும்பமாக நடந்து ரசித்ததுண்டா.
களைத்து வரும் வேலையில்,
காற்றின் சுகந்தம் ரசித்ததுண்டா.
கடற்கரை ஓரத்தில் கால்கள் நனைத்து,
அலைச்சத்தம் ரசித்ததுண்டா.
கடலோரம் மணல் வீடு கட்டி,
சிப்பிகள் பதித்து ரசித்ததுண்டா.
வயலோரம் நடந்து
நாட்டு நாடும் அழகை ரசித்ததுண்டா.
வாசல் திண்ணையில்,
கோலம் போடும் அழகை ரசித்ததுண்டா.
கூட்டத்தின் நடுவே,
உனை தேடும் மனைவியை ரசித்ததுண்டா.
குறும்பு செய்துவிட்டு,
பிதுங்க முழிக்கும் குழந்தையை ரசித்ததுண்டா.
குழந்தைகளின் வாய்ச்சண்டையின்,
வசனங்களை ரசித்ததுண்டா.
தோல்வியுற்றதும் அவர்கள்,
அழும் அழுகையை ரசித்ததுண்டா.
இது போன்ற,
சுமாரான கவிதையை ரசித்ததுண்டா.
இன்றிலிருந்து தானும் கவிஞன் ஆகி,
பிறர் கஷ்டங்களை ரசிக்கப் போவதுண்டா...
ஹா ஹா ஹா....
ஆக்கம்
அபு அம்மாராஹ்
No comments:
Post a Comment