நான் படித்தவற்றில் "நேரத்தின் அருமையை" விளக்குகின்ற ஒரு ஆங்கில கவிதையை மொழி பெயர்த்துள்ளேன்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
நேரத்தின் அருமை
வருட இறுதிப் பரீட்சையில் Fபெயில் ஆன மாணவனை கேட்டுப்பார்..
ஒரு வருடத்தின் அருமை தெரியும்.
ஒரு குழந்தையை சுமக்கும் தாயை கேட்டுப்பார்..
ஒரு மாதத்தின் அருமை தெரியும்.
ஒரு பத்திரிகை நிருபரை கேட்டுப்பார்..
ஒரு வாரத்தின் அருமை தெரியும்.
காதலிக்காக காத்திருக்கும் காதலனை கேட்டுப்பார்..
ஒரு மணித்தியாலத்தின் அருமை தெரியும்.
ரயில் அல்லது பஸ்ஸை தவரவிட்டவனை கேட்டுப்பார்..
ஒரு நிமிடத்தின் அருமை தெரியும்.
நொடிப்பொழுதில் விபத்தில் சிக்கியவனை கேட்டுப்பார்..
ஒரு வினாடியின் (செகண்டின்) அருமை தெரியும்.
ஒலிம்பிக்கில் வெள்ளியை வென்றவனை கேட்டுப்பார்.
ஒரு மில்லி செகண்டின் அருமை தெரியும்.
நாசாவில் ராக்கெட் அனுப்புபவனை கேட்டுப்பார்..
ஒரு மைக்ரோ செகண்டின் அருமை தெரியும்.
தமிழில்: அபு அம்மாராஹ்
No comments:
Post a Comment